சர்ச்சைக்குரிய காணொளி குறித்து விசாரணைகள் ஆரம்பம்! (காணொளி இணைப்பு)

Monday, 18 February 2019 - 13:18

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்றதை அடுத்து, இலங்கை வீரர்கள் தங்களது ஓய்வறையில் வெளியிட்ட கருத்துக்கள் அடங்கிய காணொளி ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த காணொளி தொடர்பில் இலங்கை கிரிக்கட் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை கிரிக்கட் அணி முகாமையாளரிடம் அறிக்கை ஒன்றும் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா இதனை எமது செய்தி சேவையிடம் குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதுதொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடக்கப்படவுள்ளது.