பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்த இளம் காதல் ஜோடி பரிதாபமாக பலி

Tuesday, 19 February 2019 - 8:24

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
புத்தளம் - நவத்தேகம – வேலேவெவ பகுதியில் கலா ஓயாவில் நீராடி கொண்டிருந்த இளம் காதல் ஜோடி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வென்னப்புவ - வைக்கால பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞரும் நாத்தாண்டி பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதியுமே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தமது பெற்றோர்களுக்கு தெரியாது திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டுக்கு வந்த வேளையே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.