கடத்தப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியொருவர் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவமொன்று அரநாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கேகாலை நகருக்கு மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக கெவிலிபிட்டி பேரூந்து தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த மாணவியை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞரொருவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறுமி தெபத்கம - பல்லேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் நண்பரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , அதற்கிடையில் சம்பவம் தொடர்பில் மாணவி அவரின் தாய்க்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , உடனடியாக செயற்பட்ட காவற்துறையினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து மாணவியை மீட்டுள்ளனர்.
இதன் போது , மாணவியை கடத்திய நபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியளித்த இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று மாவனெல்லை மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கேகாலை நகருக்கு மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக கெவிலிபிட்டி பேரூந்து தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த மாணவியை முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞரொருவர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறுமி தெபத்கம - பல்லேகம பிரதேசத்தில் அமைந்துள்ள அவரின் நண்பரின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் , அதற்கிடையில் சம்பவம் தொடர்பில் மாணவி அவரின் தாய்க்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் , உடனடியாக செயற்பட்ட காவற்துறையினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்து மாணவியை மீட்டுள்ளனர்.
இதன் போது , மாணவியை கடத்திய நபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியளித்த இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்று மாவனெல்லை மாவட்ட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.