மத்துகம - பிட்டிகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் பிட்டிகல பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்டிகல - தலகஸ்பே பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற மது விருந்தின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொலை தொடர்பில் ஆறு பேரிடம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல காவல்துறை முன்னெடுத்து வருகிறது.
நேற்று இரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் பிட்டிகல பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிட்டிகல - தலகஸ்பே பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற மது விருந்தின் போது ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொலை தொடர்பில் ஆறு பேரிடம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிட்டிகல காவல்துறை முன்னெடுத்து வருகிறது.