இருநூறு அடி குழிக்குள் விழுந்த சிறுவன், 16 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இந்தியா மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே தொரண்டல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு சாலை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் 6 வயது சிறுவன் ரவி பண்டிட். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
பின்னர் அவரை தேடிய போது அருகில் தோண்டியிருந்த குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறகுதான் 200 அடி ஆழ குழிக்குள் சிறுவன் விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர்.
காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர் கயிறு மூலம் சிறுவனை மீட்க முயன்றனர். முடியவில்லை. இதனால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாகத் தேசிய பேரிடர் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்தக் கிராமத்தினர் குழிக்கு அருகே பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பேரிடர் குழுவினரின் ஆலோசனைப்படி குழிக்குள் ஒக்சிஜன் செலுத்தப்பட்டது. மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்துக்கு மேல் பாறையாக இருந்ததால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. விரைவில் மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிறுவன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டது.
16 மணி நேர போட்டத்துக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டதும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க குழந்தையை பெற்றனர்.
பின்னர் பரிசோதனைக்காக சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இந்த சம்பவம் இந்தியா மகாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகே தொரண்டல் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு சாலை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவரின் 6 வயது சிறுவன் ரவி பண்டிட். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
பின்னர் அவரை தேடிய போது அருகில் தோண்டியிருந்த குழிக்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. பிறகுதான் 200 அடி ஆழ குழிக்குள் சிறுவன் விழுந்தது தெரியவந்தது.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர்.
காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர் கயிறு மூலம் சிறுவனை மீட்க முயன்றனர். முடியவில்லை. இதனால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாகத் தேசிய பேரிடர் குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் அந்தக் கிராமத்தினர் குழிக்கு அருகே பள்ளம் தோண்டி, சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பேரிடர் குழுவினரின் ஆலோசனைப்படி குழிக்குள் ஒக்சிஜன் செலுத்தப்பட்டது. மருத்துவர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்துக்கு மேல் பாறையாக இருந்ததால் உடைக்க முடியவில்லை. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்தது. விரைவில் மீட்டு விடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சிறுவன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டது.
16 மணி நேர போட்டத்துக்குப் பிறகு சிறுவன் மீட்கப்பட்டதும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க குழந்தையை பெற்றனர்.
பின்னர் பரிசோதனைக்காக சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.