பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் இரு வீடுகளில் சோதனை

Monday, 18 March 2019 - 19:52

%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
நியூசிலாந்து, கிரிஸ்சர்ச் பள்ளி வாசல் தாக்குதல் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் உள்ள இரு வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பள்ளிவாசல்களை தாக்கிய நிலையில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள துப்பாக்கிதாரி பிறன்ரன் ரரண்ட் இன் சகோதரியின் வீடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையாளர்களுக்கு அவர் பூரண ஆதரவினை வழங்கி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிவாசல் தாக்குதல்கள் தொடர்பாக அவுஸ்திரேலியாவில் பெறப்படும் சகல தகவல்களும் நியூசிலாந்து புலனாய்வாளர்களிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.