நாட்டின் சில பகுதிகளில் இன்று கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை!

Tuesday, 19 March 2019 - 6:56

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%21+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
மத்திய, சப்ரகமுவ, மேல், மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பகுதிகளில் தற்காலிக கடும் காற்று ஏற்படக்கூடும் என  சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில் , மின்னலால் ஏற்படக்கூடும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.