3 பேரை சுட்டுக்கொன்ற சந்தேகநபர் கைது

Tuesday, 19 March 2019 - 7:38

3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலுடன் தொடர்புடையவரை அந்த நாட்டு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி, 37 வயதுடைய, துருக்கி நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் சரிவர கண்டறியப்படாத நிலையில், கைது செய்யப்பட்டவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நெதர்லாந்து காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.