கல்வி சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் ஆசிரியை ஒருவர் வைத்தியசாலையில்....!

Tuesday, 19 March 2019 - 11:41

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+12+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D....%21
அம்பலாங்கொடை தெஹியத்தகண்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 மாணவர்களும் ஆசிரியை ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை பகுதிக்கு மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற பேருந்து ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மூன்று பேருந்துகளில் இவ்வாறு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.