ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை நாளை ஆரம்பம்

Sunday, 24 March 2019 - 16:28

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
2015 - 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை நாளை ஆரம்பமாகிறது.

அதன்படி , மஹரகம அபெக்ஷா மருத்துவமனைக்கு ஔடதம் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி தொடர்பில் நாளை காலை 9 மணிக்கு சுகாதார அமைச்சின் உதவி செயலாளரான ரோஹன டி சில்வாவை இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , இந்த வாரத்தினுள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்நாட்டுக்கு பசுமாடுகள் கொண்டு வந்ததில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மோசடியொன்று தொடர்பிலும் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.