மேல் மாகாணத்தினுள் நேற்று இரவு 10 மணி தொடக்கம் இன்று அதிகாலை 3 மணிவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட வாகன சோதனை நடவடிக்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 293 சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றம் தொடர்பில் ஆயிரத்து 879 வழக்குகளும் இதன்போது பதிவு செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வாகன விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் முகமாக காவற்துறை மா அதிபரின் விசேட ஆலோசனையின் கீழ் நாடு பூராகவும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்திய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து குற்றம் தொடர்பில் ஆயிரத்து 879 வழக்குகளும் இதன்போது பதிவு செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
வாகன விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளும் முகமாக காவற்துறை மா அதிபரின் விசேட ஆலோசனையின் கீழ் நாடு பூராகவும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.