இலங்கை கிரிக்கட்டிடம் லசித் மாலிங்கவை கோரியுள்ள இந்தியா!

Tuesday, 26 March 2019 - 7:37

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21
இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் அடுத்து இடம்பெறவுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் இரண்டு போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையில் இடம்பெறும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்களே, உலகக் கிண்ண அணிக்காக பெயரிடப்படுவர் என ஸ்ரீலங்கா கிரிக்கட் முன்னதாக அறிவித்திருந்தது.

இதன் காரணமாக, இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் ஆறு போட்டிகளில் தம்மால் பங்கேற்க முடியாது என மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லசித் மாலிங்க அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் லசித் மாலிங்கவை பங்கேற்கச் செய்வதற்கு இயன்றளவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை, ஸ்ரீலங்கா கிரிக்கட்டிடம் கோரியுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 28 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு போட்டிகளும் நிறைவடைந்ததன் பின்னர் நாடு திரும்பும் லசித் மாலிங்க, மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் இணைந்துகொள்ள உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.