தேவாலயமொன்றில் சுவர் இடிந்து விபத்து - 13 பேர் பலி

Friday, 19 April 2019 - 16:47

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
தென்னாபிரிக்காவின் வாஷுலு ந(ற்)றால் மாகாணத்தில் தேவாலயத்தின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகினர்.

அத்துடன், 29 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பகுதியில் கடும் மழை பெய்வதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என உள்ளுர் காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்த சந்தர்ப்பத்தில் சிலர் அங்கு உறங்கிக்கொண்டிருந்தனர் என்றும் உள்ளுர் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.