மாபெரும் வெற்றியை பதிவு செய்த சன்ரைசர்ஸ் அணி!

Sunday, 21 April 2019 - 20:29

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%21
இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இன்று இடம்பெற்ற 38வது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 9 விக்கட்டுக்களால் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.

இந்த நிலையில், 160 எனும் தமது வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 15 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் டேவிட் வோர்னர் 67 ஓட்டங்களையும் , ஜோனி பேர்ஸ்டோவ் 80 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலன்சர்ஸ் பெங்களுர் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.