இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்த மக்களுக்காக உலக முழுவதும் பல நாடுகளில் வெவ்வேறு முறையில் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி இரவு 12.00 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ரஸ்யாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்தில் மின் விளக்குகளால் இலங்கை கொடி காட்சிப்படுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கையில் உயிரிழந்த மக்களுக்காக மலேசியாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு சோகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகலாவிய கலைஞர்களும் இலங்கையில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தமது சோகத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் இந்திய பொலிவுட் நடிகர் நடிகைகளான அபிசேக் பச்சன், அனுஸ்கா சர்மா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிரபல அமெரிக்க பாடகர்களான செலின் டியோன் மற்றும் மரியா கரேவும் அடங்குகின்றனர்.
உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் பாரிஸ் நகரில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி இரவு 12.00 மணிக்கு ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் ரஸ்யாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்தில் மின் விளக்குகளால் இலங்கை கொடி காட்சிப்படுத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கையில் உயிரிழந்த மக்களுக்காக மலேசியாவில் விளக்குகள் ஏற்றப்பட்டு சோகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உலகலாவிய கலைஞர்களும் இலங்கையில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தமது சோகத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் இந்திய பொலிவுட் நடிகர் நடிகைகளான அபிசேக் பச்சன், அனுஸ்கா சர்மா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிரபல அமெரிக்க பாடகர்களான செலின் டியோன் மற்றும் மரியா கரேவும் அடங்குகின்றனர்.