கொழும்பு பங்குச் சந்தைக்கு இன்று பூட்டு

Monday, 22 April 2019 - 7:36

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்கு சந்தையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை கருத்திற் கொண்டு, வர்த்தகர்களின் பாதுகாப்பிற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரச்சினைகள் சற்று தனிந்தவுடன் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கொழும்பு பங்கு சந்தையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.