23 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்போட்டியில், தமிழக வீராங்கனை ஒருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
23 ஆவது ஆசிய தடகள செம்பியன்ஷிப் போட்டிகள் கட்டாரின் டோகாவில் இடம்பெற்று வருகிறது.
இந்த போட்டிகளில், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகள் பங்கு பற்றியுள்ளன.
இதில் 2வது நாளான நேற்று இடம்பெற்ற மகளீருக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில், 30 வயதான தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 2.7 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.