இலங்கை அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
எடின்பேர்க் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருந்தது.
ஆரம்பத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக தாமதிக்கப்பட்ட போட்டியை, 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும் மழை நீடித்தமையினால், ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.