இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியுடன் பாகிஸ்தானின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.
குறித்த போட்டித் தொடரானது மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகிவிருந்தது.
பாகிஸ்தான் 19 வயதிற்கு உட்பட்டோர் அணி, நான்கு நாட்கள் கொண்ட இரண்டு போட்டிகளிலும், 3 ஒருநாள் போட்டிகளிரும் விளையாட திட்டமிட்டிருந்தது.
எனினும், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து, குறித்த தொடர் பிற்போடப்படப்பட்டது
இந்த நிலையில், குறித்த தொடரானது 5 ஒருநாள் போட்டிகளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஜுன் மாதம் 5ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, ஜீன் மாதம் 6 ஆம் திகதி பாகிஸ்தான் 19 வயதிற்கு உட்பட்டோர் அணி நாடுதிரும்பவுள்ளது.