புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பஸ்தர்

Monday, 20 May 2019 - 10:43

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
மன்னம்பிட்டி ஆச்சிபோக்குவ பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவனபிட்டி பகுதியில் புகையிரத கடவை பாதுகாவலராக கடமையாற்றிய 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது தொழிலை இழந்த நிலையில் சில வருடங்கள் மனஉளைச்சலில் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.