மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த தந்தை!

Monday, 20 May 2019 - 11:22

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21
நபரொருவர் தனது மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று ரக்குவானை ஹல்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஹல்பிட்டி , கொடகவெல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான தந்தை ரக்குவானை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றைய தினம் பெல்மடுல்ல நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரக்குவானை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.