நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி – படங்கள்

Sunday, 26 May 2019 - 10:14

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E2%80%93+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
சிலாபம் - நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியாகினர்.

கெப் ரக வாகனம் ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதில், உந்துருளியில் பயணித்த 18 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் பலியாகினர்.

பலியானவர்களில் இரண்டு இளைஞர்கள், தலைக்கவசம் இன்றி உந்துருளியில் பயணித்துள்ளனர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் ரக வாகனம் யாழ்ப்பாணம் பிரதேச செயலக காரியாலயத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.