பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவருக்கு எதிராக இரண்டு பெண்கள் இன்று முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
குருநாகல் போதனா மருத்துவமனையின், கட்டுப்பாட்டு சபையிடம் அவர்கள் குறித்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
வாரியபொல மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், குறித்த காலப்பகுதி முதல் தமக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக அந்த பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனையில் மருத்துவர், குறித்த முறைப்பாடுகள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ள முடியும் என காவற்துறையின் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மருத்துவர், தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய மருத்துவர் குருநாகல் காவல்துறையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குருநாகல் போதனா மருத்துவமனையின், கட்டுப்பாட்டு சபையிடம் அவர்கள் குறித்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.
வாரியபொல மற்றும் குருநாகல் பிரதேசங்களை சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் குறித்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற நிலையில், குறித்த காலப்பகுதி முதல் தமக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லாது போயுள்ளதாக அந்த பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட குருநாகல் மருத்துவமனையில் மருத்துவர், குறித்த முறைப்பாடுகள் இருப்பின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மேற்கொள்ள முடியும் என காவற்துறையின் ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியகட்சருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மருத்துவர், தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய மருத்துவர் குருநாகல் காவல்துறையினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.