இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் இந்திய அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 336 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணிசார்பாக ரோஹித் சர்மா 140 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 77 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக்காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.
இதன்பின்னர் குறித்த போட்டி 40 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கமைய டக்வத் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 302 என்ற இலக்கை அடைய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணியின் ரோஹித் சர்மா தெரிவு செய்யப்பட்டார்