41 வயதுடைய மெஜிக் மேன் என அழைக்கப்படும் சன்சால் லஹிரி கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.
இவர் பல்வேறு மெஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். இவர் உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெஜிக் நிகழ்ச்சிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘ஹேரி ஹைதினி’ என்ற எஸ்கேப் கேம் மெஜிக்கை நேற்று செய்துள்ளார். அதன்படி, கை கால்களை கட்டி ஆற்றில் குதித்து உள்ளே இருந்து மீண்டும் வெளியே வரவேண்டும்.
அவர் படகில் சென்று ஆற்றில் குதித்ததாகவும், கிரேனில் ஆற்றில் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் ஆற்றில் குதிக்கும் நிகழ்வினை காண ஹவுரா பாலத்தில் பொதுமக்கள் பலரும் திரண்டுள்ளனர்.
காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்ததன் பின்னர் உடனே தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு வந்தனர். உள்ளே குதித்த அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை.
நீண்ட நேரம் வௌியே வராமையினால் அவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இது தொடர்பில் காவல் துறையினர் தகவல் அளிக்கையில் “அவரை தடுப்பதற்கு நாங்கள் எவ்வளவோ முயற்சித்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. பின்னர், எங்கள் நீச்சல் அதிகாரிகள் அவர் குதித்த இடத்தை தேடத் தொடங்கினர். ஆனால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை நேரம் என்பதால் ஆற்றின் உள்ளே ஒரே இருட்டாக இருந்ததால் தேடுவதை நிறுத்திவிட்டோம்” என தெரிவித்தார்.
அவரது சடலத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு 2013ம் ஆண்டும் இதேபோல், ஆற்றுக்குள் குதித்து சாகசம் செய்துள்ளார். அப்போது, அவர் தங்களை ஏமாற்றுவதாக அங்கிருந்த பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். 6 வருடங்களுக்குப் பின் மீண்டும் அதே சாகசத்தை நிகழ்த்துவதாக அவர் ஆற்றில் குதித்துள்ளதோடு, இது வரை அவர் வௌியே வராமையினால் தேடு பணிகள் தீவிமடைந்துள்ளன.
.