3 பேர் தமிழகத்தில் கைது..

Tuesday, 18 June 2019 - 14:37

3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து கொண்ட 3 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டு முதற்தகவல் பதிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

த ஹிந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த தினம் கோயம்புத்தூரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது மொஹமட் ஹுசைன் சாஜஹான் மற்றும் ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் மூவரும் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் கவரப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து அவர்களுக்கு இடையிலும் அவர்களது நண்பர்கள் மத்தியிலும் வரவேற்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவர்கள் மூவரும் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.