காவுவண்டியுடன் மோதுண்டு ஒருவர் பலி

Tuesday, 18 June 2019 - 18:09

+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
எல்பிடிய ஊரகஸ்மந்சந்தி பிரதேசத்தில்  மிதி வண்டியுடன் நோயாளர் காவுவண்டி மோதுண்டு, மிதிவண்டியாளர் உயிரிழந்துள்ளார்.

லேனகல்பதான பிரதேசத்தினை சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று மதியம் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நோயாளர் காவு வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஊரகஸ்மந்சந்தி காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.