மின்னல் தாக்கி ஒருவர் பலி!!

Tuesday, 25 June 2019 - 11:22

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21%21+
மொனராகலை சியம்பலாண்டுவ பகுதியில் மின்னல் அழுத்தத்திற்கு பலியாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய அடை மழை பெய்துக்கொண்டிருந்த வேளையில் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த போது குறித்த நபர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் மாலை வேளையில் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.