சச்சின் டெண்டுல்காரின் திறமைக்கு கிடைத்த பரிசு....!

Friday, 19 July 2019 - 13:35

%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81....%21
கிரிக்கட் துறையில் சிறந்த திறமையை வெளிப்படுத்தியவர்களுக்கான பெயர் பட்டியலில் புதிதாக சச்சின் டெண்டுல்கர், அலன் டொனால்ட் மற்றும் அவுஸ்திரேலய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கெத்ரின் ஃபிட்ஸ்பட்ரிக் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி.யின் ஹோல் ஒஃப் பேம் என்ற பட்டியல் நேற்று லண்டனில் வைபவ ரீதியாக வெளியாக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்து சாதனைப்படைத்துள்ளார்.

அவர் கடந்த 2013ம் ஆண்டு நொவம்பவர் மாதம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஹோல் ஒஃப் பேம் பட்டியலில் இணையப்பெற்ற ஆறாவது இந்திய வீரரும் சச்சின் டெண்டுல்கர் ஆவார்.

இதற்கு முன்னர் சுனில்கவாஸ்கர், பிசான் சிங் பேடி, கபில் தேவ், அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் ட்ராவிட் ஆகிய இந்திய வீரர்கள் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டனர்