முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் இருந்து காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட 76 கத்திகள் மற்றும் 13 கோடரிகளை மீள கையளித்தமை தொடர்பில் வெல்லம்பட காவற்துறையினர் பதில் பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை ஊடக பேச்சாளர் ருவாண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
காவற்துறையில் வழக்கு பொருட்களாக உள்ள குறித்த பொருட்களை சிரேஷ்ட்ட காவற்துறையினரின் எந்த வித அனுமதியும் இன்றி அவர் மீள கையளித்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.