கைதிகள் பறிமாற்ற சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக ஹொங்கொங் விமான நிலையத்தின் 200க்கும் மேற்பட்ட விமான சேவைகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஹொங்கொங் இரகசிய காவற்துறையினர் மாறுவேடம் தரித்து ஈடுபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்திற்கு காவற்துறையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஹொங்கொங் இரகசிய காவற்துறையினர் மாறுவேடம் தரித்து ஈடுபட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் பெரும்பாலான ஆர்ப்பாட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டதை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்திற்கு காவற்துறையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.