பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்..

Saturday, 17 August 2019 - 8:08

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..
பலாலி விமான நிலையத்தின் சேவைகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் பலாலி விமானப்படைத் தளத்தில் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.