விகாரைக்குள் வந்த மர்ம நபர்களில் ஒருவர் கைது...

Saturday, 17 August 2019 - 9:53

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
அத்துருகிரிய – கல்போத்த விகாரையினுள் அண்மையில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்து தப்பிச் சென்ற சில நபர்களில் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாரையின் விகாரதிபதி மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய நேற்று மாலை வெலிக்கடை – கோதமீ வீதி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

28 வயதான குறித்த சந்தேக நபர், பொரளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.