மின்னல் தாக்கி இளைஞன் பலி ..

Saturday, 17 August 2019 - 10:08

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF++..
கெக்கிராவ-மாமினியாவ பகுதியில் ஏரி ஒன்றின் அருகில் இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் மரதன்கடவல-கொல்லன்குட்டிகம பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் ஏரிக்கு அருகில் இருந்த கால்நடைகளை மீண்டும் தொழுவத்திற்கு அழைத்து சென்ற பொழுதே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.