அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

Wednesday, 21 August 2019 - 19:35

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+14+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கல்முனை நீதிமன்ற பதில் நீதவான் பயாஸ் றஸாக் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கு மீதான விசாரணையும் நான்காம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.