ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் தயார்

Friday, 23 August 2019 - 12:51

%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
நிர்மாணத்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சகல வழியிலும் ஒத்துழைப்பை வழங்க அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரச பிரிவை விட தனியார் பிரிவு நிர்மாணத்தின் தரம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.