இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான திகதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரியில் இன்று இடம்பெற்ற செயலமர்வொன்றின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்ரிய இதனை தெரிவித்துள்ளார்
இன்று மாலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.