தமது வேதன பிரச்சினைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னாள் முன்னெடுத்துவரும் சத்தியாகிரக போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என ஓய்வு பெற்ற மற்றும் விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆறாவது நாளாகவும் இந்த சத்தியாகிரக போரட்டம் தொடர்வதோடு, தமது சில உறுப்பினர்கள் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற போதும், அங்கு தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தியின் தலைவர் யூ.டி.வசந்த தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொடவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளனர்.
இதன்போது ஆயுள் வரை அனைத்து வேதனங்களும், கொடுப்பனவுகளும் வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வாக்குறுதியளித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆறாவது நாளாகவும் இந்த சத்தியாகிரக போரட்டம் தொடர்வதோடு, தமது சில உறுப்பினர்கள் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்ற போதும், அங்கு தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தியின் தலைவர் யூ.டி.வசந்த தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொடவை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துள்ளனர்.
இதன்போது ஆயுள் வரை அனைத்து வேதனங்களும், கொடுப்பனவுகளும் வழங்குவது குறித்த அமைச்சரவை பத்திரம் நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வாக்குறுதியளித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.