வீட்டிலுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு- 10 பேர் பலி

Monday, 14 October 2019 - 13:56

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
உத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை சமையல் செய்துகொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.