ராஜிவ் காந்தியின் கொலை தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை

Monday, 14 October 2019 - 20:02

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விடயம் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தமாதம் 21ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்ரவண்டி தொகுதிக்கான பிரசார கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றி இருந்தார்.

அதில் ராஜிவ் காந்தி தமிழ் மக்களின் எதிரி என்றும், அவர் தமிழ் நாட்டு மண்ணில் வைத்து கொல்லப்பட்டமை வரலாற்றில் பெரிதும் பேசப்படும் என்றும் கூறி இருந்தார்.

அத்துடன் அவரால் இந்திய அமைதிக்காக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை தொடர்பிலும் விமர்சனங்களை சீமான் முன்வைத்துள்ளார்.