எதிர்வரும் 48 மணித்தியாலங்களுள் 7 மாவட்டங்களுக்கு 100 முதல் 150 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கமைய, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என்றும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.