நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக மேல், சப்ரகமுவ, வட மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யும்.
நாட்டின் வடக்கு பிரதேசத்தில் மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் கடுமையான காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் காலை வேளையில் முகில் சூழ்ந்து காணப்படும்.
சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடுமையான காற்றுவீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.