நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான சந்தைக் கோரிக்கையை பூர்த்தி செய்வதற்காக உடனடி பெறுகையான 12 ஆயிரம் மெற்றிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் சவுதி அரேபியாவில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும், இலங்கையில் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதன் காரணமாக அதற்கான கோரிக்கை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த சில தினங்களில் சந்தையில் எரி வாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்படடிந்த நிலையில், 12 ஆயிரம் மெற்றிக் தொன் திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.