பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைகளுக்கான நாளை லண்டன் பயணமாகவுள்ளார்.
அவர் வெளிநாடு செல்வதற்கான தடையை பாக்கிஸ்தானிய நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் பயணமாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கி;ன்றது.
பணாமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உடல் நல குறைவு ஏற்பட்டிருந்தது.
இந்தநிலையில், அவரது உறவினர்கள் மற்றும் வைத்தியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருந்தது.
அதேநேரம், நான்கு வார காலத்தினுள் மருத்துவ சிகிச்சையினை பெற்றதன் பின்னர் தாயகம் திரும்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
எப்படியிருப்பினும் லண்டனில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் சிகிச்சைக் காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.