பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் ஏனெஸை பதவி விலகுமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது அந்தநாட்டு பாதுக்காப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் பலியாகினர்.
கடந்த 14 ஆண்டுகளாக பொலிவியாவின் ஜனாதிபதியாக ஈவோ மொரலஸ் பதவி வகித்த நிலையில் அங்கு அன்மையில் இடம்பெற்ற தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றிருந்தார்.
எனினும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில் தன்னை பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டார்.
அவரை பதவி விலகுமாறும், விரைவில் ஜனநாயக தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரியும் தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 14 ஆண்டுகளாக பொலிவியாவின் ஜனாதிபதியாக ஈவோ மொரலஸ் பதவி வகித்த நிலையில் அங்கு அன்மையில் இடம்பெற்ற தேர்தலிலும் அவரே வெற்றி பெற்றிருந்தார்.
எனினும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் பதவி விலகியிருந்தார்.
இந்த நிலையில் தன்னை பொலிவியாவின் இடைக்கால ஜனாதிபதியாக ஜீனைன் ஏனெஸ் அறிவித்துக் கொண்டார்.
அவரை பதவி விலகுமாறும், விரைவில் ஜனநாயக தேர்தல் ஒன்றை நடத்துமாறு கோரியும் தொடர்ந்தும் அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.