புதிய செயலாளர்கள் நியமனம்...

Tuesday, 19 November 2019 - 11:35

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D...
7 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று ருவண்வெலிசேயவில் சத்திய பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜெயசுந்தர நியமிக்கப்பட்டதுடன், திறைசேரியின் செயலாளராக எஸ்.ஆர். ஆட்டிகலவும் நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்னவும், தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக ஓசத சேனாநாயக்கவும் நியமிக்கப்பட்டனர்.