24 வயதான பெண் செய்த காரியம். காவல்துறையினரால் அதிரடியாக கைது..

Wednesday, 20 November 2019 - 7:42

24+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
கல்நேவ - மிதெல்லேவ பகுதியில் 3 வயது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் 24 வயது பெண் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்ட குழந்தையின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் குறித்து பெண், தனது கணவருடனிருந்து விலகி, தனது தாய் மற்றும் தந்தை ஆகியோருடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய தினம், குறித்த குழந்தையை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்ற அவர், குழந்தையை கொலை செய்து உரப் பொதி ஒன்றுக்குள் இட்டு, தமது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் தந்தையும், தாயும் இல்லாத சந்தர்ப்பத்தில், அவரை தனது வீட்டுக்கு அந்தப் பெண் அழைத்துச்சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அந்தக் குழந்தை மீது கொண்ட தாக்கநிலை காரணமாக, குறித்த பெண் அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், அவர் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.