ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஐரோப்பிய தங்கப் பாதணி விருது வழங்குவது வழக்கம்.
இந்நிலையில், கால்பந்து உலகில் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, நடப்பு ஆண்க்கான தங்கப் பாதணி விருதை வென்றுள்ளார்.
32 வயதாகும் லியோனல் மெஸ்ஸி, இந்த விருதை ஆறாவது முறையாக பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.