போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள சில கைதிகளுக்கு வழங்குவதற்காக அவித்த மரவள்ளிக் கிழங்கிற்குள் மறைத்து வைத்து போதைப்பொருளை கொண்டுசெல்ல முயற்சித்த பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள், அந்த அவித்த மரவள்ளிக்கிழங்கை சோதனைக்கு உட்படுத்தியபோது, மிகவும் சூட்சுமமான முறையில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர், காலி - வெலிவத்த பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக காலி காவல்துறையினரிடம் அவர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகளினால் நேற்றைய தினம் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகள், அந்த அவித்த மரவள்ளிக்கிழங்கை சோதனைக்கு உட்படுத்தியபோது, மிகவும் சூட்சுமமான முறையில் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர், காலி - வெலிவத்த பகுதியை சேர்ந்த 54 வயதுடையவர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக காலி காவல்துறையினரிடம் அவர் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.