வாக்குமூலம் பெற வேண்டும்..

Wednesday, 11 December 2019 - 18:50

+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரட்ன மற்றும் மங்கள சமரவீர ஆகியோரிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை காண்பித்து குறித்த பெண் அதிகாரியை அச்சுறுத்தியதாக ராஜித்த சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை அவர் எங்கிருந்து அவதானித்தார் என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.